All Stories

எதிர்வரும் மார்ச் 14, 15 ஆம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா - 9000 பக்தர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்ப்பு

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவையொட்டி இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (06.03.2025) பி.ப 02.30 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

எதிர்வரும் மார்ச் 14, 15 ஆம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா - 9000 பக்தர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்ப்பு

மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளை வலுவூட்டும் இரு நாள் பயிற்சி பாசறை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளை வலுவூட்டும் இரு நாள் பயிற்சிப்பாசறை நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் வி.மைக்கல் கொலின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் நேற்று (05) இடம்பெற்றது.

மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளை வலுவூட்டும் இரு நாள் பயிற்சி பாசறை

நீர்கொழும்பு லயோலா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியில் இராணுவத் தளபதி பங்குபற்றல்

நீர்கொழும்பு லயோலா கல்லூரி தனது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியை 2025 பெப்ரவரி 28, அன்று நடாத்தியது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

நீர்கொழும்பு லயோலா கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியில் இராணுவத் தளபதி பங்குபற்றல்

திருகோணமலை மாவட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராய்ந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நேற்று முன் தினம் (26) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராய்ந்த  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல்

வடமத்திய மாகாணத்தில் மனித-யானை மோதலைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நடவடிக்கை

வடமத்திய மாகாணத்தில் மனித-யானை மோதலைக் குறைக்கும் நோக்கில் கடந்த இரண்டு வாரங்களில் யானைகள் நடமாடும் பகுதிகள், தற்போதுள்ள யானை வேலிகள், வனப் பகுதிகள் மற்றும் கண்காணிப்புச் சாவடிகள் கட்டுதல் மற்றும் GIS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரைபடமாக்கல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டதாக அனுராதபுர மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.

வடமத்திய மாகாணத்தில் மனித-யானை மோதலைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நடவடிக்கை

ஊடக ஒழுக்கநெறி மற்றும் ஊடகப் பாவனை தொடர்பாக பிரதேச ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித் தொடரின் முதலாவது மாவட்டத்திற்கான செயலமர்வு மட்டக்களப்பில்..

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஊடக ஒழுக்கநெறி மற்றும் ஊடகப் பாவனை தொடர்பாக பிரதேச ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித் தொடரின் முதலாவது மாவட்டத்திற்கான செயலமர்வு, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இன்று (27) மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒல்லாந்தர் கோட்டை வளாக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

 

ஊடக ஒழுக்க நெறிக் கோவை, சமூக ஊடக செயற்பாடு மற்றும் ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள் தொடர்பாக இதன் போது மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தியதுடன், 2025 வரவு செலவுத் திட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

 

இதன் போது 10 ஊடகவியலாளர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டதுடன், இவ்வாறான நிகழ்வை ஏற்பாடு செய்தமை தொடர்பாக மாவட்ட ஊடகவியலாளர்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.

 

இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார, மாவட்ட செயலாளர் ஜே முரளிதரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், அரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் எல். பி. திலகரத்ன, தற்போதைய மொறவெவ பிரதேச செயலாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட உதவி செயலாளருமான அ. நவேஸ்வரன், மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பதிகாரி பி ஜீவானந்தன், தகவல் திணைக்களத்தின் ஏனைய அதிகாரிகள் உட்பட மாவட்டத்தின் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.