All Stories

சுதேச பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து பிரதமர் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பு...

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட தேசிய விழா ஏப்ரல் 14 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் கடுவலை, பஹல போமிரியவில் உள்ள சட்டத்தரணி சமன் லீலாரத்னவின் இல்லத்தில் இடம்பெற்றது.

சுதேச பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து பிரதமர் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பு...

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

வளமான நாடு, அழகான வாழ்க்கை"க்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டுவரும் இவ்வேளையில், மலரும் புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புடனும், புதிய தொலைநோக்குடனும் வரவேற்போம்.

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

நாட்டின் வெற்றிக்காக, அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றுபடுவோம்..

நாட்டின் வெற்றிக்காக, அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றுபடுவோம் என்று ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்

நாட்டின் வெற்றிக்காக, அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றுபடுவோம்..

புலம்பெயர்ந்தவர்களினால் இலங்கைக்கு இரண்டாவதாக பாரிய அந்நியச் செலாவணி இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில்  பதிவாகியுள்ளது. 

புலம்பெயர்ந்தவர்களில் இலங்கைக்கு இரண்டாவதாக பாரிய அந்நியச் செலாவணி இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில்  பதிவாகியுள்ளதன்படி இவ் வந்நியச் செலாவணியின் பெறுமதி 693.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

புலம்பெயர்ந்தவர்களினால் இலங்கைக்கு இரண்டாவதாக பாரிய அந்நியச் செலாவணி இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில்  பதிவாகியுள்ளது. 

மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி அமைப்புக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும்

2025 ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வரை ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணி வரை தங்கள் சூரிய மின்சக்தி அமைப்புகளை செயலிழக்கச் செய்யுமாறு நாடு முழுவதும், கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி அமைப்புக்களைப் பயன்படுத்துபவர்களிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

மேலும், நீண்ட விடுமுறைக் காலத்தில் தேசிய மின்சார தேவையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் அதிக சூரிய மின்சக்தி உற்பத்தி காரணமாக, தேசிய மின்சாரக் கட்டமைப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

எனவே, இந்த முக்கியமான காலகட்டத்தில் தேசிய மின்சாரக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையைப் பராமரிக்க, கூரை சூரிய மின் சக்தி அமைப்பை பயன்படுத்துவோரிடம் தமது ஒத்துழைப்பை எதிர்பார்த்திருப்பதாகவும் இலங்கை மின்சார சபை மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.

மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி அமைப்புக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும்