காடுகளில் தீப்பற்றுவதைத் தடுப்பது தொடர்பாக மக்களைத் தெளிவுப்படுத்தும் நோக்கில் பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் மார்ச் இரண்டாம் திகதி வரை தீக் கட்டுப்பாட்டு வாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள கலிப்சோ ரயில், ஒரு நாளைக்கு 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நல்லதன்னி வாழமலை மேல் பகுதியில் நேற்று (பெப்ரவரி 24) ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக காட்டு தீ அணைப்பதற்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் Bambi Bucket யின் உதவியுடன் இலங்கை விமானப்படை இலக்கம் 04 படையணிக்கு சொந்தமான பெல் 412 ஹெலிகாப்டர் ஒன்று பயன்படுத்தப்பட்டது.
கிராம மக்களின் சுகாதார நிலையை முன்னேற்றும் நோக்கில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் சுவ உதான நடமாடும் மருத்துவ கிளினிக் திட்டத்தின் தொடரில் மற்றும் ஒரு திட்டம் அண்மையில் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபத்தர பிரதேச செயலகப் பிரிவில் களுபோவிடியான தேயிலைத் தொழிற் சங்கத்திற்குச் சொந்தமான தேரங்கல அரச தேயிலைத் தொழிற்சாலை வளாகத்தில் இடம்பெற்றது.
ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் (UNHRC) 58வது அமர்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கிறார்.
யானைகள் புகையிரதத்தில் மோதுவதை தடுப்பதற்காக செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ) தொழில்நுட்பம் மற்றும் ஏனைய புதிய தொழில்நுட்ப சாதனங்களை விரைவாகப் பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (24) சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்றது.
மகாவலி குடியேற்றங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை மேம்படுத்துவதற்காக வேண்டி, மகாவலி C வலயத்தில் உள்ள 10 குளங்களில் 15 இலட்சம் மீன் குஞ்சுகள் இடப்பட்டுள்ளன.
அதிகமான இலங்கை இளைஞர் யுவதிகள் ஜப்பானில் விவசாயத்துறையில் பணியாற்றுவதாகவும் மேலும் இந்த சந்தர்ப்பங்களை அதிகரிக்க முடியும் என்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமட்டா அகியோ தெரிவித்தார்.
கதிர்காம நகரம் நாட்டின் முக்கிய நகரமாக மாற்றப்படும் - வர்த்தக, வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன
இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் ட்ரின் தி டாம் (Trinh Thi Tam) அவர்கள் நேற்று (24) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
தேர்தல் இணைய சேவைகள் குறித்து பூர்வீகக் குடிமக்கள் மற்றும் பூர்வீகக்குடி பள்ளி மாணவர்களுக்கு அறிவூட்டும் நிகழ்வு தம்பானை கனிஷ்ட பாடசாலையில் சமீபத்தில் நடைபெற்றது.